அறத்துப்பால் | ||||||||
| ||||||||
1. | அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு. | |||||||
2. | கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின். | |||||||
3. | மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார் நிலமிசை நீடுவாழ் வார். | |||||||
4. | வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு யாண்டும் இடும்பை இல. | |||||||
5. | இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு. | |||||||
6. | பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க நெறிநின்றார் நீடுவாழ் வார். | |||||||
7. | தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால் மனக்கவலை மாற்றல் அரிது. | |||||||
8. | அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது. | |||||||
9. | கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான் தாளை வணங்காத் தலை. | |||||||
10. | பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார் இறைவன் அடிசேரா தார். |
Monday, December 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment